Tuesday, September 6, 2011

நெடுஞ்சாலைப் பயணமாய்...(2)

எங்களை ஊக்குவிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி..!

நண்பா, பத்தாயிரம் என்ற எண்ணைப்பார்க்கையில் கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கிறது, இதில் தங்களின் பொன்னான நேரத்தை நம் பதிவிற்கு வந்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நம் நன்றியை சொல்லித்தான் ஆக வேண்டும், அவர்கள் இன்றி இந்த எண் இல்லை.

அதே போல் நீ இன்றி உன் உந்துதல் இன்றி நான் தினமொரு கவிதை என்று ஆரம்பித்திருக்க முடியாது இது இன்னும் செம்மையாக தொடர அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்…

நம் நட்பு போல் நம் வாசகர்களின் நட்பும் ஊக்கமும் போல் என்றும் நிலைத்திருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

ஒத்திருந்து, ஓடித்திரிந்து,
ஊழியம் செய்தே...
உள்ளம் சிதைந்தோம்!

சிதைந்தது சரி பார்க்க,
சிந்தனை களைந்தோம்...
பயணம் தொடங்கி,
கவிதை வளர்த்தோம்..!

கைகோர்த்திங்கு பயணித்திருக்க...
கடந்த பாதையும், தூரமும்
கடந்ததை விட,
இருப்பதை காட்டும்!!

இதில் என் அடி
கடந்த சாலையும்
உன் அடி தாண்டிய
சாலையும் கணக்கில் வாரா...!

ஒத்திருந்து, ஓடி திரிய,
இருக்கும் சாலையே
நெடுஞ்சாலை என்றுணர்த்தும்...
பயணம் தொடர்ந்திருக்கும்,
சிந்தனை களைந்திருக்கும்,
இது நெடுஞ்சாலைபயணம்,
நிற்காது முடியாதிருக்கும்
தொடர்பயணம்,
நம் நட்பு போல்!

வாசகரின் உந்துதலில்
விடிவெள்ளி தேடும்
கவிதைப்பயணம் இது….!!

1 comment:

  1. கவிதை பயணம் சிறக்கட்டும்!

    ReplyDelete