Monday, September 26, 2011

ஏணி

ஏற்றம் தரும் ஏணிக்கு
என்றும் ஏற்றமில்லை!
தன்னிலை அறிந்து,
தன்னிடமே இருந்திட,
ஏமாற்றமில்லை!!

ஏறுவோர் இறுங்கிடுவர்
என்றறிந்த ஏணி போல்,
ஏற்றிவிடு மற்றவரை...!
இறங்குவோரை தாங்கிடவே
நீ நிலையாய் இருந்திட,
ஏமாற்றமில்லை வாழ்விலே!!

2 comments:

  1. ஏறுவோரை ஏற்றிவிடவும்
    இறங்குவோரைத் தாங்கி இறக்குதலே தன்
    பணியெனக் கொண்டதால் ஏணிக்கில்லை
    என்றும் உயர்வும் தாழ்வும் என்ற
    அருமையான கருத்தைச் சொல்லிப்போகும்
    கவிதை அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் தொடரும் ஊக்கத்திர்க்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி


    ஜேகே

    ReplyDelete