Saturday, July 30, 2011

வயசுக்கோளாறு

பலமிருந்தும் மனமின்றி
இளமையில்!

மனமிருந்தும் பலமின்றி
முதுமையில்!

விடலையாய்,
விட்டேத்தியாய் இருந்திட,
வயசுக்கோளாறென்றே
உலகம் கூறும்!!

Wednesday, July 27, 2011

சிரிப்பு!

வெற்று, வேடிக்கை,
அழகு, ஆனந்தம் - என
சிரிப்பு, சிரிப்பு, பூரிப்பு!

உன்னைப் பார்த்து சிரி!
உன் உருவைப் பார்த்து சிரி!
நினைவில் வைத்து சிரி!
நிஜமாய் நிதமும் சிரி!

தோல்வி கண்டால் சிரி!
துவண்டு போனால் சிரி!
துக்கம் போக சிரி!
ஊக்கம் பெற சிரி!

வயது குறைய சிரி!
வியாதி போக சிரி!
விவாதமின்றி சிரி!
விகாரமின்றி சிரி!
வித் விதமாக சிரி!

கூடி நின்று சிரி!
கூடி வாழ்ந்திட சிரி!
சுகம் பெற்றிட சிரி!
பேரின்பம் அடைந்திட சிரி!

Sunday, July 24, 2011

நீயும் நானும்

நீ எல்லையை நிர்ணயிக்க,
நான் மீறுகிறேன்...
நீ மரபு தனை விதிக்கிறாய்;
நான் தாண்டுகிறேன்...
நீ வரையறுக்க.
நான் கரையின்றி ஆகிறேன்...
கட்டுப்பாடு என்று நீ நினைக்கிறாய்;
விடுதலை என்கிறேன் நான்...

நீ எல்லையாய்,
மரபாய், விதியாய் இருக்க
மீறுதலும், கரை தாண்டுதலுமே
இயற்கையன்றோ?!

நீ எல்லாமாய் இருக்க,
நான் எல்லையாய்,
மரபாய், விதியாய் ஆகுதலே
நியமம் அன்றோ?!

Wednesday, July 20, 2011

நிழல் கவிதை - 2


கடலைப்
பார்த்தமர்ந்து,
அலையோசையில்
நம்மையிழந்து,
கரையோடு
பேச்சாய்
இருந்த்தெல்லாம்
மாறிப்போயாச்சு!

கடலையும்,
கரையையும்,
நெனப்பையும்
வீட்டிலே
அடைச்சு வெச்சாச்சு...
உன்னைப் போல...!!

Monday, July 18, 2011

நிழல் கவிதை - 1


எல்லையில்லா
ஊக்கத்துடன் கடல்...
எதையும் தாங்கும்
பலத்துடன் மணல்..
என்றும் தீரா
முயற்சியுடன் அலை..
அடிக்க அடிக்க
அணைக்கும் கரை...

இவைகளை
நாம் உட்கார்ந்து
பார்த்தால் போறும்...!
வாழ்வில் என்றும்
உற்சாகம் ஊறும்!!

என்றோ எழுதிய கவிதை - 23

பாடிப் பறந்தேன்...!
தாவித் திரிந்தேன்...!
யார் கையிலும் சிக்காத
காற்றின் சுதந்திரம் எனக்கு...!

அனைத்தையும்
'மூன்று முடிச்சு'-களில்
இழந்து விட்டேன்!!

Sunday, July 17, 2011

நிழல் கவிதை!

வாசக அன்பர்களே...!

நிழல் கவிதைக்கு பதில் கவிதை அனுப்புங்களேன்...!


அது உங்கள் பக்கத்தின் பதிவாய் இருக்கலாம்.. அல்லது இங்கு பின்னூட்டமாய் இருக்கட்டும் :-)

பி கு - இங்குதான் அமர்ந்து தோழர் ஜே கே அவர்கள் தினமும் கவிதை எழுதுகிறாராம்!

Saturday, July 16, 2011

ஊட்டச்சத்து

அம்மை அமுதில் துவங்குவது
தந்தை கரம் பிடித்தே வளர்வது

சகோதரி பாசத்தில் செழிப்பது
சகோதரன் கைகோர்க்க நிற்பது
நண்பன் தோளில் சாய்வது

மனையாள் பரிவில் தழைப்பது
மகன் போர்வையில் வாழ்வது

ஊட்ட ஊட்ட ஊருமிது..
அறியாது உள்ளிருக்க..
புரியாது ஊர்ந்திருக்க...
தேவைக்கு மட்டும்
கைக்கொடுக்கும் ஊட்டச்சத்து!!

Friday, July 15, 2011

புவியீர்ப்பு!

வாழும் போதும்,
வாழ்ந்த பின்னும்,

மிதித்தோருக்கும்
உறங்க இடங்கொடுக்கும்
பூமியாயிருக்க....

ஆசையெனக்கு!!

Thursday, July 14, 2011

மின்னல்!

தன்னில் வரும் மின்னலை
தாங்குதே வானம்
என்றே வியந்திருந்தேன்....

உன் பார்வைத்தாக்கம்
என்னில் தெரியும் வரை!

Wednesday, July 13, 2011

கடிகாரத்துவம்!

கடிகாரம்
போல்தான் வாழ்வு!
மற்றவரின் உந்து
சக்தியிலேதான் சுழற்சி!

உந்துதல் நிற்க
காட்சி பொருளாவோம்!
பயனற்று, உயிரற்று,
வெறும் பொருளாவோம்!!

Tuesday, July 12, 2011

தெகட்டாதிருக்கும்...

உண்ணுதலும் கசந்து போகும்,
பழகு தமிழும் கூட துவர்க்கும்,
பேச்சும் தெகட்டிப்போகும்...
அதிகமாகும் போதிலே!

காதல் மட்டும்
தெகட்டாதினித்திருக்கும்
அதிகமாகையிலே..!

Monday, July 11, 2011

வரமும் சாபமும்

காதலிக்க தன்னை மறந்தான்
காதல் வரம் சாபமானது...

தோல்வியில் காதலை அறிந்தான்
சாபமே வரமானது..!

Sunday, July 10, 2011

காத்தலும் அழித்தலும்

காத்தலும் அழித்தலும்
இயற்கையின் இருமுகமாம்!

ஓர் முகம் மறைத்து மறு முகம்
காட்டுவதே இயற்கையாம்!!

Wednesday, July 6, 2011

நீங்கா வாசம்

கூடிய நினைவெல்லாம் சுவாசமாய்..
பேசிய பேச்செல்லாம் வாசமாய்..
தனிமையிலும் தெரியுது!

கூடமெல்லாம் புரண்டாலும்,
மண் வாசம் கூட சேர மறுக்குது..!
கடல் தாண்டி சென்றாலும் கூட
உன் வாசம் என்னுள் நீங்காதிருக்குது..!!

Friday, July 1, 2011

கைவசமாகாதது..

இளமையில் சிந்தையும்
மனதும் உறங்க,
உடல் விழிக்கச்சொன்னது!

முதுமையில் சிந்தையும்
மனதும் விழித்திருக்க,
உடல் உறக்கம் கேட்கிறது!

ஒத்துவரா முரணிது,
வசப்படுத்த நினைத்தும்,
கைவசமாகாதது!!