Thursday, September 30, 2010

அயோத்தி!

அயோத்தி

அல்லாவுக்கும் இராமருக்கும்
உலகமே சொந்தம்;
அயோத்தியில் மட்டும் அவர்களை
சிறை வைக்க நிர்ப்பந்தம்!

வழக்கு

அறுபது ஆண்டு போராட்டம்
கண்டும் தீரவில்லை வழக்கு
நிலுவையில் இருப்பது
நீதி மட்டுமல்ல, கடவுளும் தான்!

சுதந்திர போராட்டம்

அறுபத்திமூன்று ஆண்டு சுதந்திரம்
கண்டும் தீரவில்லை போராட்டம்!
அன்று விதேசிகளிடம், இன்று
சுதேசிகளிடம்!

Wednesday, September 8, 2010

தானியத்துரோகம்!

துரோக அரசியல்
சட்டசபையில் விவாதிக்கும்
தானியம் அழுகிக்கொண்டிருக்கும்
இத்தேசத்து பட்டினி மனிதர்களோடு!

Tuesday, September 7, 2010

இலவசம்!

எல்லாம் கொடுத்தாகி விட்டது
தேர்தல் வாக்குறுதியாய்;
அடுத்த தேர்தலில் காற்றை இலவசமாய்
தரும் திட்டமாம்!
இல்லாதது தருவதாய் சொன்ன போது
பயப்படாத மனிதன் பயப்படுகிறான்
இருப்பதும் போய்விடுமோ என்று!!

Monday, September 6, 2010

விடியலைத்தேடி

காஷ்மீரில் ஆயுதங்கள் எல்லை தாண்டும்;
சீன சாத்வீகம் எல்லையையும் ஊடுருவும்;
எல்லையில்லா இந்திய வளத்திற்கு
எல்லையிலே தான் தொல்லை!

விடியலைத்தேடும் என் தேசமோ
அரசியல் போர்வைக்குள்!

Sunday, September 5, 2010

சென்னையில் மழை!

சாலைகளின் குளியலில்
வாகனங்களின் மறியல்
அலுவலக போராளிகளின்
தாமத வழிகாட்டி
கண்ணீர் குவியலில்
இயற்கைக்கு புத்தாடை
செந்நீர் குட்டையாய்
மகனுக்கு குளத்தின் அறிமுகம்
இடைவிடா தடைதரும்
மின்சாரத்தோழன்
பள்ளங்களை மறைக்கும்
சமதர்மசான்று
கேட்காமல் வரும்
விடுமுறை விண்ணப்பம்
இது சோம்பேறியாக்கும்
தந்திரம், வானிலை
அறிக்கையாளரை என்றும்
ஏமாற்றும் மந்திரம்