Friday, December 11, 2009

"பாயும் புலி" பாட்ஷா!

ரஜினி அவர்கள் பிறந்த நாளன்று (12/12/2002) எழுதப்பட்ட கவிதை
இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.


அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் உரைப்பவனே!
துடிக்கும் கரங்கள் உடையவனே!
தர்மத்தின் தலைவனான
இந்த முத்து எங்கள் சொத்து!

முரட்டுக்காளையாய் இருந்தாலும்
மூன்று முடிச்சில் அடங்கித்தான் போனாய்!
ஆறிலிருந்து அறுபது வரை ஆன்மிகம்தான்
என்றாலும் அகிலமெங்கும் உன் கொடி பறக்குது!

பொல்லாதவன் எனச் சிலர் நினைக்க
நல்லவனுக்கு நல்லவன் நான் என்றாய்!
போக்கிரி ராஜா எனச் சிலர் தூற்ற
தனிக்காட்டு ராஜா நான் என்றாய்!
அவர்கள் விமர்சனம் உனக்கு எங்கேயோ கேட்ட குரல்!
ஏனெனில் அனேக தமிழர் உன் படையப்பா!

நான் அடிமை இல்லை என உரக்க நீ உரைத்தாலும்
இந்த அண்ணாமலைக்கு நாங்கள் அடிமைதான்!
பாபா முத்திரைதான் எங்களுக்குப் பாட முத்திரை!!

அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

Thursday, December 10, 2009

மகாகவி பாரதி!


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

மகாகவி பாரதி உதித்த தினம்
(11 திசம்பர்)

Tuesday, December 8, 2009

கையெழுத்து!

பருப்பு ஆசிரியரின் 'கையெழுத்து'-ஐப் பார்க்க, படிக்க இங்கே சொடுக்கவும்!

மரணம்!

காற்றை உள்வைத்துக்
காற்றைத் தேடிக்
காற்றாயாகும் பயணம்!

Monday, December 7, 2009

தூசி!

விழிக்குளத்தில்
தூசி விழுந்ததால்
கலங்கலாயிற்று...!