Saturday, October 24, 2009

குத்தால சாரல்!

குத்தால சாரல் நீயடி!
உன் காதலில் நனைந்தேன் நானடி!
நிற்காத அருவி உன் நினைவடி!
குளித்தால் மனது குளிருதடி!

அருவியின் வெள்ளத்தில் நனைந்தேனே!
உன் பார்வையின் வெள்ளத்தில் மறைந்தேனே!
கண்ணிலே கண்ணிலே உனை நான் கண்டபின்
மண்ணிலே மண்ணிலே சொர்க்கம்தானே!

வீட்டினுள் அருவியைச் சிறையாக்க,
வாழ்வினில் பாதி உனையாக்க,
தாலிகட்டி சொந்தமாய்,
வேலி கட்டி மொத்தமாய், எனக்கு...!

பொறந்த கொழந்தை ரொம்ப அழகா இருந்தா திருஷ்டிப் பொட்டு வெப்பாங்க! அது போல, அருவியாக் கொட்டிய 'ஜே கே' கவிதைக்கு 'கேயார்' பதில் உரை இதோ... (பதில் கவிதைன்னு சொல்ல மனசு வர்லே!)

பார்க்கப் பார்க்க
அருவியும் அழகு...!
பார்க்கப் பார்க்க
பாவையும் அழகு...!

அருவியில் நனைந்தபின்
ஆனந்தமாய்க் குளித்தபின்
பசிதான் தோன்றும்...
மனம் உணவைத்தான் தேடும்!

உன்னில் நனைந்தபின்
உன்னில் குளித்தபின்
பசிதான் தீருமடி..!
உணர்வும் உறங்குமடி!

சாரலாய் நீயிருந்தாலும் - உனைச்
சார்ந்தேதான் நான் என்றும்!

No comments:

Post a Comment