Sunday, October 4, 2009

என் காற்று...என் (சு)வாசம்!

காற்றே இங்கு வீசாதே! காதல் தீயை மூட்டாதே!
பிரிவின் ராகம் பாடாதே! சோக கீதம் மீட்டாதே!

உன் பிரிவுக்காற்றை என்னுள் வைத்து
நான் சுவாசிக்க மறந்தாலும்
உன் நினைவுக்காற்று என்னுள் வந்து
என்னை சுவாசிக்க வைத்திடுமே!

உன் வாசம் நானெடுத்து ஒரு நேசம் வித்திட்டேன்
என் சுவாசம் நீயெடுத்து ஒரு வாசம் வித்திட்டாய்
இனி வீடெங்கும் மணம்தான் என்றென்றும் வீசி
என்னோடு தினம் தினம் பேசிடுமே!

ஓடி ஓடிக் காதல் நான் புரிந்ததேன்?
இன்று பிரிந்து நானும் வருந்துவதேன்?
தேடித் தேடி காற்றும் நம்மைப் பார்ப்பதேன்?
புயல் காற்றும் என்னுள் வேர்ப்பதேன்?

இன்றும் கூட முதிர் காதல் என்னுள்ளதோ?!

No comments:

Post a Comment