Saturday, October 10, 2009

ரஜினிக்கு ஒரு பாட்டு!

வெற்றிக்கனி எட்டி பறிக்க
எம்பத்தான் வேண்டும்
வியர்வைத்துளி பூமியிலே
சிந்தத்தான் வேண்டும்
சோதனையை முட்டித்தள்ள
நிமிரத்தான் வேண்டும்
வேதனையை விட்டுத்தள்ள
சிரிக்கத்தான் வேண்டும்

இமையிலே உறக்கம் அழுத்தும்போதும்
முழிக்கத்தான் வேண்டும்
வழியிலே தோல்வி வருத்தும்போதும்
ஏற்கத்தான் வேண்டும்
இடையிலே தடைகள் வரும்போதும்
தாண்டத்தான் வேண்டும்
உன் அடியிலே பூமி நழுவும்போதும்
நிற்கத்தான் வேண்டும்

தலையில கனம் இல்லாம
இருக்கத்தான் வேண்டும்
மனசுல திடம் என்றுமே
இருக்கத்தான் வேண்டும்
உறுதி ஒளி கண்ணுக்குள்ளே
மின்னத்தான் வேண்டும்
வெற்றிப்பசி வயிற்றுக்குள்ளே
கிள்ளத்தான் வேண்டும்
நம்பிக்கை பலம் புஜத்தினிலே
தெரியத்தான் வேண்டும்
இலட்சிய இலக்கை இறுதியிலே
அடையத்தான் வேண்டும்

(ரஜினியின் சிவாஜி தான் இன்று ஊரெங்கும் ஒரே பேச்சு. சரி நம்பளும் ரஜினி சார் பாடுகிற மாதிரி எழுதலாம்னு ஒரு முயற்சி !! பாட்டுல முதல் வரி எல்லாம் ரஜினி பாடுகிற மாதிரியும் அடுத்த வரி எல்லாம் பக்கத்துல கூட்டமா மற்றவர்கள் எல்லோரும் CHORUS பாடுகிற மாதிரியும் யோசித்தேன், அதன் விளைவு தான் இந்த பாடல்!)

No comments:

Post a Comment