Thursday, October 22, 2009

நதிகள்!

மலையில் ஜனித்து
நிலத்தில் புலம்பெயரும்
அகதிகள்!

வெயிலில் மெலிந்து,
மழையில் பெருத்து,
புயலில் பூரித்து,
கடலில் கலந்து போகும்
தியாகிகள்!

அரசியல் சாக்கடையால்
தம் உறவைச் சேர இயலா
அனாதைகள்!

3 comments:

  1. நல்லது. ஒரு சின்ன திருத்தம் மட்டும்
    //அரசியல் சாக்கடையால்//
    அரசியல்வாதிகள் என்ற சாக்கடையால்

    ReplyDelete
  2. முழு கவிதையிலும் இது நச்! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முழு கவிதையிலும்...

    அரசியல் சாக்கடையால்
    தம் உறவைச் சேர இயலா
    அனாதைகள்!//

    இது நச்! வாழ்த்துக்கள்.

    ReplyDelete