Wednesday, October 7, 2009

என்றும் காதல்...

காதல் என்றும் சுகந்தருமே!
உள்மனதைக் கேளு சொல்லிடுமே!

ஏழ்மையிலும் வளருமடி இது!
தூய்மையான கவிதையடி!
கண்களில் வளர்ந்து மனதில் படர்ந்து
உலகை இங்கே வளர்க்குதடி!

உயிரைக் கூட உருவிக் கொண்டோடும்,
பிரிந்த உறவைச் சேர்த்து வைக்கும்,
அன்பாய் அழகாய் மனதை மாற்றும்,
சுவையாய் முழுமையாக்கும்

இங்கு சிரித்திருப்பதும்,
சுகித்திருப்பதும் நம் கையில்
காதலில் வாழ்வோமே,
ஒன்றாய் வள்ர்வோமே...!

காதல் செய்ய இளமையாய் மாறும் மனது,
காதல் கொள்ள மன்னிக்க பழகும் மனது,
பகைமை பொறாமை ஏதுமில்லாமல்,
வெண்மையாய், வெறும் குழந்தையாய் ஆக்கிடும்...

காதல் என்றும் சுகந்தருமே!

No comments:

Post a Comment