Tuesday, October 6, 2009

அன்றும் இன்றும்

கைகள் உணர்வாய்
மொழிக்கும் மௌனமாய்
காதல் காமமாய்
எழுதும் கவிதையாய்

மயிர்க்கால் அசைவும்
மனசுள் அலைபாயும்
சிரிக்க சிரிக்க
சிலிர்த்துப் போகும்

வெட்கம் விட்டு
விரசம் மறந்து
விரகம் உணர்ந்து
வளர்த்த தீபம்
இன்னும் அணையவேயில்லை!
ஒளியாய்ப் பக்கத்தில்!

நடு சாமத்தில்
'தொம்' என்று கால்போட்டு
தூக்கம் கலைக்கும்
என் வீட்டுக் கொழுந்து!!

தாலாட்டி மடி ஆடும்,
நாவும் பாட்டு பாடும்,
மனம் மட்டும்
அன்றைய நினைவை அசைபோட்டு,
என்றும் எனக்கு அழகாய்,
உறங்கும் மனைவியைப் பார்த்து,
பெருமூச்சு விடும்!
மடி ஆட்டிக்கொண்டே!

1 comment: