Wednesday, October 28, 2009

என்றோ எழுதிய கவிதை - 8

'மதர் டங் தெலுங்கு. படிக்கறது கான்வென்ட். அவளுக்கு போயி பர்த்டே ப்ரஸன்ட் பாலகுமாரன் புக்கா? அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இதுலல்லாம் இல்லங்கறதாவது உனக்கு தெரியுமா? ' என்று பொங்கிய தங்கைக்கு என் அவஸ்தை புன்னகைதான் பதில்.

பாலகுமாரன் எழுதிய 'மௌனமே காதலாகி...' புத்தகத்தின் முதல் பக்கத்தில்

'அன்பு' என்பது மூன்றெழுத்து
'நட்பு' என்பது மூன்றெழுத்து
'பாசம்' என்பது மூன்றெழுத்து
'.....' (அவள் பெயர்!) என்பதும் மூன்றெழுத்துதான்!

என்று கையொப்பமிட்டுக் கொடுத்ததின் பின்னணியை எப்படி என் அப்பாவித் தங்கையிடம் சொல்வேன்?!

இன்று, ஈஸிசேரில் உட்கார்ந்து அசை போடும் போது, "கொஞ்சம் தைரியமாய்
"'காதல்' என்பது மூன்றெழுத்து" எனும் வரிகளைச் சேர்த்திருந்தால்
'தோல்வி' என்ற மூன்றெழுத்தைத் தவிர்த்திருக்கலாமோ?!"
என்று தோன்றுகிறது!

No comments:

Post a Comment