Wednesday, May 4, 2011

மரமும் மனிதரும்

வளர்ந்தவர் விதைத்தது, வளர்ந்தது,
வளர்ந்து அது மரமானது!

வளர்ந்தவரும் அது போல்
தான் வளர்ந்தார், தழைத்தார்;
கட்டையிலிட, மரத்தோடு
மரமாய் மறைந்திடுவார்!

மாந்தர் மரமாய் இருந்திட,
மரம் மாந்தராய் கனிவு காட்டுது
நிழலாய், விழுதாய்,கனியாய்!

மரத்தின் மனமறியாது,
மனதினை மரமாயாக்கி மரணிப்பார்,
மரம் மட்டும் அன்றும் தழைத்திருக்கும்
உண்மை ஓலித்திருக்கும்!

6 comments:

  1. சிந்தனை சிறப்பு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  2. மரம் மரம் -னு திட்றது இப்போதான் புரியுது!

    ReplyDelete
  3. மனிதனோடு மரத்தின் வாழ்க்கையை கூறும் திறமை அலாதியானது...

    மரம் மனிதனைக்காட்டிலும் அதிக நட்கள் வாழக்கூடியது..

    கவிதை அருமை..

    ReplyDelete
  4. நன்றி அரசன்

    நன்றி தென்றல் ரொம்ப திட்றாங்கன்னு நொந்துருக்கேன் இப்போ நாம் மட்டுமில்லனு தெரியும் போது கொஞ்சம் ஆறுதல்

    ReplyDelete
  5. மரம் மனிதனானது... மனிதன் மரமானான்...

    ReplyDelete
  6. மரம் மனிதனானது... மனிதன் மரமானான்...

    ReplyDelete