Tuesday, May 3, 2011

உழைப்பாளன்!

உழைப்பாளர் இருக்கும் வரை,
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி,
நிலமெல்லாம் நீராகும்!

சிந்திய நீரெல்லாம்
கதிரவன் குடித்திடுவான்!
மாதம் மும்மாரியாய்
உமிழ்ந்திடுவான்!!

உழைப்பாளனாய் இருக்க
இயற்கையும் செழித்திருக்கும்!
நம் வாழ்வும்
தித்தித்திருக்கும்!!

1 comment:

  1. உழைப்பே உயர்வு ! உணர்ந்தோருக்கு நன்மை சேரும்!

    ReplyDelete