Tuesday, November 3, 2009

பொய்!

பொய் ஒன்றுதானே வாழ்வில் நிம்மதி
வெறுமை இல்லாத சங்கதி...!

வெண்மையாய் நீயும் வாழ்ந்து பாரடா!
தன்மையாய் நீயும் இருந்து பாரடா!
மனம் இங்கு மங்கிப் போகும்
மதி இங்கு குன்றிப் போகும்
வாழ்வும் பின் தங்கிப் போகுமடா...!

பொய் ஒன்றைக் கேட்டுப் பார்
மனதுள்ளே மயங்கிப் பார்
கண்ணோடு பேசிப் பார்
நடைமுறையை நினைந்து பார்
நிஜம் இங்கு வலிக்குமடா!

தந்தையாய் மகனின் அன்பு மாறாதே
தாயாயினும் மனையாளின் காதல் குறையாதே
காலமாயினும் நட்பின் வலிகள் உறைக்காதே
வயதாயினும் கண்ணில் நீரும் சுரக்காதே
வாய்மையாய் இருக்க வலியின் நிறம் புரியுதடா...

கண்மூடி நின்று பார்
உன்னை நீயும் கேட்டுப் பார்
உலகை உன்னில் உரித்துப் பார்
உண்மை உனக்கு வலிக்கும் பாரடா!

No comments:

Post a Comment