Sunday, March 13, 2011

ஒப்பிடுதல்!

என் வீட்டு கூரை பக்கமிருந்த
சிறு வீட்டை பார்த்து
பெருமிதம் கொண்டேன்!

சற்றே திரும்ப,
அண்ணாந்து பார்த்த அடுக்கு மாடி
ஏக்கம் தந்தது!

இங்கே பெருமை என ஏதுமில்லை;
இருகோடுகளாய் தானிருக்கும்,
ஒரு கோட்டிற்கு மற்றது பெரிதாகும்,
புரிந்தால் எளிதாகும்!!

2 comments:

  1. ஒப்பிடுதல் ஏக்கத்தைதான் தரும்.இருப்பதைக்கொண்டு இனிமையாய் வாழ்வதே நன்று என்பதை அழகாய் கவிதையாய் புனைந்திருக்கிறீங்க.
    நல்லாயிருக்கு!

    ReplyDelete
  2. ரொம்ப நாளா இது மனசுல இருந்தது தென்றல் எப்படி கொடுப்பதென்பது அறியாதிருந்தேன் நல்லா இருக்குனு சந்தோஷப்படுத்திட்டீங்க

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete