Saturday, February 26, 2011

வாழ்க்கை

கண்ணாடி வாழ்க்கை வாழ்கிறோம்,
அதன் முன்னாடி தேயப்பார்க்கிறோம்.
தள்ளாடி ஊர்ந்து போகிறோம்,
முன்னேற்றம் என்ற மாயை ஏற்கிறோம்.

பளபளக்கும் பிம்பம் பார்த்து மயங்கி போகிறோம்,
விரிசலோடு அதை வாங்க பார்க்கிறோம்,
சிதறிப்போகும் துகளாயாகும் தன்மை மறக்கிறோம்,
உதறிப்போகும் நிமிடம் கரைத்து உண்மை உணர்கிறோம்!

இல்லாத நாளை இங்கே விட்டுச்செல்வோமே!
இருக்கும் இன்றை ஏற்றுக்கொள்வோமே!
நடக்கும் நொடியை நமதாக்கிகொள்வோமே!
இன்ப நெடியை நுகர்ந்து வாழ்வோமே!!

4 comments:

  1. இன்றைய நாள் இனிதாகட்டும்!
    அழகான ,உணரவேண்டிய பதிவு!

    ReplyDelete
  2. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  3. நிதர்சனக் குவியல்.
    தங்கள் கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  4. நன்றி தென்றல்


    வாழ்த்துக்கும் வந்தமைக்கும் நன்றி தமிழ்தோட்டம் தொடர்ந்து வருகை தந்து தங்கள் விமர்சன்ம் மூலம் என்னை மேம்படுத்துவீர்கள் என நம்புகிறேன் நன்றி

    வாழ்த்துக்கு நன்றி ஜெகதீஸ்வரன் தொடர்ந்து வாருங்கள்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete