Thursday, August 4, 2011

விட்டுக்கொடுத்து

விட்டுக்கொடுத்தால்
இனிமை என்றேன்...

பின்பற்ற
பறைசாற்றினேன்...

பின்பற்றி
இன்பம் கண்டேன்...

என்னையே
விட்டுக்கொடுத்து,
பின்பு உணர்ந்தேன்....

அதையும்
விட்டுக்கொடுத்தாலே
இனிமையென!!

8 comments:

  1. சரணாகதி தத்துவத்தை
    மிக எளிய முறையில்
    கவிதையாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்
    தரமான படைப்பு
    ( பின்பு உணர்ந்தேன் என
    வார்த்தைகளை பிரித்தே கொடுத்தால்
    இன்னும் சிறப்பாக இருக்குமோ )

    ReplyDelete
  2. நன்றி சித்ரா!

    ரமணி அவர்களே...தங்களது கவனம் பாராட்டுக்கு உரியது...'பின்பு உணர்ந்து' மாற்றிவிட்டோம்! நன்றி பல!

    -கேயார்

    ReplyDelete
  3. என்னையே
    விட்டுக்கொடுத்து,
    பின்பு உணர்ந்தேன்....//தரமான படைப்பு

    ReplyDelete
  4. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் வாழ்க்கையின் பலம்!
    நல்லா இருக்கு கவிதை!

    ReplyDelete
  5. அதையும்
    விட்டுக்கொடுத்தாலே
    இனிமையென!!

    நல்ல கவிதை..
    விட்டுக்கொடுப்பு என்பது ஒருமனிதனுக்கு மிகவும் முக்கியம்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. நன்றி சித்ரா

    நன்றி ரமணி தங்களின் பின்னூட்டத்தையும் அதன் கருத்துக்கும் நன்றி அதை ஏற்று மாற்றிய என் அன்பு கேயாருக்கும் நன்றி

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கிம் நன்றி மாலதி

    ஜேகே

    ReplyDelete
  7. வாழ்த்துக்கும் வருகைக்கும் தொடரும் இந்த நட்பிர்க்கும் மிக்க நன்றி விடிவெள்ளி

    ஜேகே

    ReplyDelete