Thursday, October 20, 2011

ஓர் மடக்கு நீர்

நீரின் மகத்துவம்
நிதம் தெரியும் அதிசயம்!

குழப்பி விட்டாலும்
தெளிந்து போகும்...
எரிந்தே இருந்தாலும்
அணைத்திடும்...

குளிர்ந்த நீரினிலே
தலை நனைத்திடவே
துரோகமும், மன ரணமும்,
வலியும் ஏமாற்றமும்
மறைந்திடுமே...!

சினந்தனிலே
மன சுமைதனிலே
விழிகளில் கண்ணீருடன்
நீ இருக்கையிலே,
ஓர் மடக்கு நீர் போதும்...
ஓராயிரம் கவலைகள் போகும்!

3 comments:

  1. நன்றி அருள், முதல் தியாகத்தின் கட்டுரை என்னை நெகிழவைத்தது, இது போல் தெரியாத அறியாத விஷயங்களை படிப்பதில் ஒர் ஆத்மார்த்த சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி அருள்

    ஜேகே

    ReplyDelete