Thursday, October 27, 2011

தீபாவளி - 3

கையெல்லாம் பட்டாசு மருந்து
முகமெல்லாம் பூரிப்பு
கடனாய் வந்ததென்றாலும்
கடலாய் இருந்தது சிரிப்பு அன்று..

கையில் படாது பட்டாசு வெடித்து
சொந்தமாய் யாவுமிருந்தும்
சொந்தங்கள் தூரமிருக்க
கடலாய் யாவுமிருந்தும்
கடனாய் வந்தது போலிருக்கும்
கண்ணாடி பார்த்து சிரித்திருக்கும் இன்று..

No comments:

Post a Comment