Wednesday, October 26, 2011

தீபாவளி -1

வரிசையாய் ஒளி
விளக்காய் ஒளி
வெடியாய் ஒளி
மத்தாப்பாய் ஒளி
என எங்கும் ஒளியாய்
ஒரு பண்டிகை!

யாவருக்கும் இனி
ஒளிமயமாய் வாழ்விருக்க
ஒளி அறிந்தோருக்கு
மட்டுமிது தீபாவளி!

ஒளியே பாராது
என்றுமிருப்போரும்
ஒளி பார்த்திடும்
நாளதிலே
உலகெங்கும்
வந்திடும் தீபாவளி!

No comments:

Post a Comment