Sunday, August 28, 2011

ஆழ்மனம்

ஆழ்கடல் மனது இது...
ஆழம் தெரியாது....
எண்ணத்தைக் கொடுத்து,
ஏக்கத்தை வளர்த்து,
விளக்கம் தருமிது...!

உயரம் உயரம் என்றிருக்கும்,
உயர்ந்த பின்னும் தொடர்ந்திருக்கும்,

ஆறாஆசை கொண்டதிது...
குறையாவிசையுமிது..!

வேட்கையைக் கொடுத்து,
வேஷத்தை வளர்த்து,
இலக்கைத் தருமிது...!
புதிரைக் கொடுத்து,
விடுகதை வளர்த்து
விடையும் தருமிது...!

குழப்பம் மிகுந்திருக்கும்...
தேடல் இருந்திருக்கும்..
தெளிந்தும் தொடர்ந்திருக்கும்...!

3 comments:

  1. கடலை விட
    ஆழமானது
    ஆழ்மனம்!!

    ReplyDelete
  2. ஆழ்மனம் பற்றிய அழகிய கவிதை. பராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. தொடரும் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முனைவரே

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவைக்கவி


    ஜேகே

    ReplyDelete