Thursday, August 18, 2011

உறவு

நன் நேரத்தில்
நீங்குதல் அறிந்து,

தாமரையிலைத்
தண்ணீராய்
நீங்கியும் நீங்காதிருக்க...

நீடித்து வளரும்...!

5 comments:

  1. தோழப் புலவரே,

    பற்றில்லாத பற்று வை....'detached' attachment-ஐ எளிமையாக்கி என் போன்ற 'நாயினும் கடையேன்'-க்குப் புரியும்படியாய் எழுதியதற்கு நன்றி பல...

    -கேயார்

    ReplyDelete
  2. மிகப் பெரிய விஷயத்தை
    மிக எளிதாக மிகச் சுருக்கமாக
    ஆயினும் மிகத் தெளிவாகச்
    சொல்லிப் போகும் இந்தப் பதிவு
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் உறவுக்கு
    நல்ல எடுத்துக்காட்டு
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. இப்போதிருக்கும் சூழ்நிலையில் தாமரை இலைத் தண்ணீரை போலும் உறவாடுவதே பலவிதங்களில் நன்மை தரக்கூடும்

    ReplyDelete
  5. உறவுக்கு நல்ல விளக்கம்

    ReplyDelete