Wednesday, August 17, 2011

உன்னில் நான்

மெழுகாய் இருக்கிறேன்
உன்னில் தான் கரைகிறேன்
தன்னை எரித்து
தனக்கே நிழல் தரும்
மெழுகாய் இருக்கிறேன்

சருகாய் ஆகிறேன் நீயின்றி
உதிரும் சருகாய் ஆகிறேன்
தளிராய் இருந்து
வளர்ந்த இடத்தில் மடியும்
சருகாய் ஆகிறேன்

தன் தேனை உயிராய்
தான் கொடுத்தும்
வண்டு கண்டு மிளிரும்
மலராய் மெருகேறி போகிறேன்

உன்னில் சேர்ந்து
மெருகேற்றிக்கொள்கிறேன்...

1 comment:

  1. // மெழுகாய் இருக்கிறேன்
    உன்னில் தான் கரைகிறேன்
    தன்னை எரித்து
    தனக்கே நிழல் தரும்
    மெழுகாய் இருக்கிறேன்//

    வருவது அறிந்தும் மெழுகு
    உருவது அறிந்தும் மெழுகு
    தருவது ஒளியே மெழுகு
    உரு(கு)வது அழிய மெழுகு
    என
    உணர்த்தினீர் கவிதை அருமை!

    புலவர் சாஇராமாநுசம்

    ReplyDelete