Monday, August 15, 2011

சுதந்திர தினச் சிறப்புக் கவிதைகள்



சுதந்திர தினம்

எல்லையாய் கோடாய்
இருக்குதே சுதந்திரம்
இருப்போர்க்கு நிலைத்திடவே...

எலலையிலே சுதந்திரம் இல்லாமலே
வீடு விட்டு, நாடு விட்டு
தன்னலத்தை பொதுவிலிட்டு
போராடுவோர் பலருண்டு...

எல்லையில்லாமல், போராடாமல்
சுதந்திரமாய் அவரும் இருக்கும் தினமே
உண்மையாய் சுதந்திர தினம்...

ஜெய்ஹிந்த்!



என் சுதந்திரம்

எல்லையிலே இருக்குது
எட்டிப்பார்த்தில்லை...!

வீட்டுப் பூட்டில் இருக்குது
திறந்து விட்டதில்லை...!

மனதிலிருக்குது
பகிர்ந்ததில்லை...!

நாட்டு ஏழ்மையிலிருக்குது
எண்ணிப்பார்த்தில்லை...!

உணர்விலெல்லாம் இருக்குது
உணர்த்திக்கொண்டதில்லை...!

கேட்ட சொல்லிலிருக்குது
சொல்லிக்கொண்டதில்லை...!

வரலாறாய் இருக்குது
வாழ்ந்ததில்லை...!

கிடைத்ததில் இருக்குது
விட மனமில்லை....!


எல்லையிலே சுதந்திரம்

இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க,
எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்...

5 comments:

  1. இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
    எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
    எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
    மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க
    ,எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்
    .
    அருமையான வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ரமணி சார் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்

    ஜேகே

    ReplyDelete
  3. உண்மை! உண்மை!
    முற்றிலும் உண்மை!

    நானும் என் வலையில் கவிதை எழுதி
    யுள்ளேன்
    வருக கண்டு கருத்து தருக!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. சுதந்திர தின கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்றி புலவரே தங்களின் வலை கண்டு கவிட்தையும் ரசித்தேன் தொடர்ந்து வருமாறு விண்ணபித்துக்கொள்கிறேன்

    தங்களின் தொடரும் ஊக்கத்திர்க்கு நன்றி தென்றல்
    ஜேகே

    ReplyDelete