Thursday, August 11, 2011

எல்லாம் தந்தாயோ?

யாவும் தந்த இறைவா!

இறப்பின் இடமும், நேரமும்
தெரியாது வைத்தாயே...

பேசும் சொல்லின் சூட்சமம்
புரியாது வைத்தாயே...

உறவும் கூட புரிந்திடா
புதிராய் செய்தாயே...

உணர்வும் கூட என் சொல்
கேளாது வைத்தாயே...

எல்லாம் தந்தும்
என் கேள்விக்கு விடையின்றி
போக வைத்தாயே....

இன் சொல்லாய் கேட்கிறேன்
மறு சொல்லாய் சொல்வாயோ...

இறைவா!
எனக்கு எல்லாம் தந்தாயோ?!

4 comments:

  1. இறைவா!
    எனக்கு எல்லாம் தந்தாயோ?!


    .... Maybe, not all.... But whatever is needed, for sure. :-)

    ReplyDelete
  2. அருமையான பின்னூட்டத்திர்க்கு நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete
  3. எல்லாத்தையும் கொடுக்காததினால் தான் இந்த ’கவிதைத் தேடல்’ உங்களிடம் உருவானது...அருமையா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  4. நன்றி தென்றல் உண்மையை சொல்லிவிட்டீர்கள்


    நன்றி
    ஜேகே

    ReplyDelete