Monday, June 27, 2011

மனையாளின் பிறந்தநாள்

மறதி ஒரு வரம்
என்றே நினைத்திருந்தேன்;
அவளின் பிறந்த நாளை
மறக்கும் வரை!!

மறந்திட்டதை நினைத்தே
சொல்லும் மனது!
சொன்னதே குற்றமாகும்!
குற்றமே வலியாகும்!
வலியே நினைவாகும்!!

நினைவாய் என்றுமிருக்கும்,
அவளின் பிறந்த நாளாய்
மறவாது நினைவிலிருக்கும்!!!

1 comment:

  1. ஆக மொத்தம் மனைவி பிறந்த நாளை கொண்டாடினீர்களா இல்லையா?!

    ReplyDelete