Sunday, June 5, 2011

தொலைந்த தேடல்

விதையில் வேர் தேடி,
விருக்ஷம் தொலைத்து,
சதையில் சுகம் தேடி,
இன்பம் தொலைத்து,
மமதையில் கெளரவம் தேடி,
ஞானம் தொலைத்து,
சிதையில் மரணம் தேடி,
காரணம் தொலைத்து,

அவசரத்தேடலில்
தன்னையே தொலைத்தது அறிய,
தொலைத்ததெல்லாம் மீண்டும் தேட,
இன்னுமொரு ஜன்மம் வேண்டுமென்றே
இறைவனை தேடிடுவாரே!!

2 comments:

  1. தேடலில் தொலைந்தோம்!
    சிந்திக்க வைக்கும் கவிதை!

    ReplyDelete
  2. நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete