Sunday, December 13, 2009

முள் வேலி

முள் வேலி ஒன்று நெய்திட்டேன்
காதலாய்

காதல் கொண்டு வேலி வளர்த்தேன்
காதல் வென்று வாழ்வும் வளர்த்தேன்
வாழ்வோடு காதல் மலர
வேலி நிற்கும் கேள்வியாய்

ஆண்டுகள் பல ஓடியும்
காதல் இன்னும் ஓயவில்லை
முள்ளும் மலரவில்லை
வேலியும் மறையவில்லை

முள்ளாய் வலியாய் என்னுள்
வேலியாய் இடவெளியாய்
என் சுற்றத்துள்

6 comments:

  1. //ஆண்டுகள் பல ஓடியும்
    காதல் இன்னும் ஓயவில்லை
    முள்ளும் மலரவில்லை//

    ரசித்தேன்....

    ReplyDelete
  2. அருமை ,வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //ரசித்தேன்....//

    ரசித்தைமைக்கு நன்றி புலவரே

    Thanks Kalyani Suresh

    தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் தியாவே

    ReplyDelete
  4. ஆண்டுகள் பல ஓடியும்
    காதல் இன்னும் ஓயவில்லை
    முள்ளும் மலரவில்லை
    வேலியும் மறையவில்லை

    அற்புதம் !!!
    உணர்ந்து ரசித்தேன் வலியை !!!

    ReplyDelete
  5. நன்றி ஆழிமழை ...

    ஜேகே

    ReplyDelete