Thursday, December 3, 2009

தியாவிற்கு நன்றி!

கவிதை கொண்டு, விதையிட்டு,
தமிழ் வளர்த்து, தமிழ் ரசித்தோம்!

தீயாய் தரணியில்,
தீரா தாகம் கொண்ட தியா,
தன்னிலும் வளர்த்து, பிறரிலும் ரசித்து,
விருதொன்று தந்து,
பதிவுகளுக்கு விழுதாய் ஆகிவிட்டாரே!

நண்பர்களுக்கு விருந்தாய்,
பதிவிற்கு விருது தந்து,
தன்னையே அனைவரிலும் பதிந்து விட்டாரே!

கவிதை வளர்க்கக்
கவிதையாய் வித்திட்டாரே!
தான் உயர, தரம் உயரும்,
நாம் உயர,தரணி உயரும்
என உணர்த்திட்டாரே!

பதிவாளர்களையும் வாழ்த்தி
நன்றியாய் வந்த கவிதை இது!
நன்றாய் ஏற்றுக்கொள்வாயா
நண்பரே, தியாவே?!

விருது பெற்ற அனைத்து பதிவாளர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

2 comments:

  1. அய்யய்யோ இப்பிடியெல்லாம் வாழ்த்திரிங்களே. மிக்க சந்தோசமாக இருக்குது

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete