Saturday, April 16, 2011

மன அழுக்கு

ஆழ் மனதின் அழுக்கு பல நாளாய்
ரணமாய் உறுத்தலாய் என்னிலிருந்தது,
முயற்சியெல்லாம் பலனின்றி ஆனது
அழுக்கின்றி இருந்திட வழி தேடி
நின்றிருந்தேன் பல நாளாய்...

மனப்பார்வை மட்டுமுள்ளவரை
சாலை தாண்டிவிட்டேன் ஓர் நாள்,
நன்றி தேடாது பாதை மாறினேன்
அவர் கோல்பார்வையில் தரை
தட்டி செல்ல என் அழுக்குதிர கண்டேன்...!

2 comments:

  1. ம்...ம்...ம்... நல்லாயிருக்கு!

    ReplyDelete
  2. நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete