Friday, April 1, 2011

என்றோ எழுதிய கவிதை - 20

சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை!

அன்னக்கிளியாய் அவளிருக்க,
ஆசையுடன் நான்
'இதயத்தை திருடாதே' என்றேன்!

'உயர்ந்த மனிதன் நீ,
ஊருக்கு உழைப்பவன் நீ,
எங்கள் தங்கம் நீ,
ஏணிப்படிகள் ஏறினாலும் எட்டாத
ஒரு தலை ராகம் நம் காதல்' என்றதும்
ஓசையின்றி நொறுங்கிப் போனேன்!

4 comments:

  1. சினிமா தலைப்பில் நல்லாயிருக்கு!

    ReplyDelete
  2. இப்போ உள்ள படங்களை வைத்து அடுத்து ஒரு கவிதை எழுதிட்டா போச்சு.... :-)

    ReplyDelete
  3. @தென்றல் - நன்றி!

    @சித்ரா - செய்யலாம்தான், ஆனா தலைப்புகள் திருடப்பட்டு, அதே பேர்ல வருதே, என்ன செய்ய?!

    -கேயார்

    ReplyDelete
  4. சி்த்ரா இது போல் பல பல கவிதைகள் கேயார் ஏற்கனவே எழுதியிருக்கிறார்

    ஜேகே

    ReplyDelete