Sunday, January 30, 2011

யுத்தம்

மாறுபட்ட யுத்தமொன்று
நடக்குது என்னுள் தினமும்
இரு மனங்களுக்கிடையில்
எது வென்றாலும் தோற்றாலும்
வெற்றி எனக்குத்தான்
அன்றைய தோல்வியே
அனுபவ பயிற்சியாய், ஆயுதமாகும்
மீண்டும் மீண்டும் யுத்தம்
நடக்கும் , யுத்தமே
தினமும் அனுபவமாகும்

4 comments:

  1. பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா...
    மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா...

    கடவுள் பாதி, மிருகம் பாதி
    கலந்து செய்த கலவை நான்...!

    என்று கவியரசரும், கவிப்பேரரசும் எழுதியதை உன் பாணியில் 'தனித்து'ச் சொல்லியிருக்கும் நண்பா! வாழ்த்த வார்த்தையில்லை!!

    'நெசம்மா'வே இது யுத்தம்தான், எல்லோருக்கும்!

    -கேயார்

    ReplyDelete
  2. நன்றி கேயார், உண்மையில் அந்த பாட்டுக்கள் எனக்கு நினைவில் வரவில்லை இதை எழுதும் போது நீ சொன்னதும் தான் மனதில் படுகிறது
    நன்றி நண்பா

    ஜேகே

    ReplyDelete
  3. தினமும் அனுபவமாகும்


    ....கவிதை.... ரொம்ப நல்லா இருக்குதுங்க!

    ReplyDelete
  4. வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்ரா

    ReplyDelete