Saturday, March 13, 2010

காதல் அந்தாதி!

கருவாய் காதல் உள்ளத்துள்
உள்ளத்து காதல் உணர்வாய் ஜனனம்

ஜனித்ததும் பருவம் கண்டது
கண்டதெல்லாம் சுகமானது

சுகமானது மட்டும் உணர்வானது
உணர்வில் அவளன்றி வேறேதும் அறியாதது

அறியாததெல்லாம் தெரிவித்தது
தெரிந்ததெல்லாம் புதிதானது
புதிதெல்லாம் புதிரானது
புதிரெல்லாம் விடையானது

விடை கண்டும் காதல் வினாவாகும்
வினாவிற்கு விடை தேடும் மனது!

7 comments:

  1. அறியாததெல்லாம் தெரிவித்தது
    தெரிந்ததெல்லாம் புதிதானது
    புதிதெல்லாம் புதிரானது
    புதிரெல்லாம் விடையானது ///

    இந்த வரிகளை ரசித்துப் படித்தேன் !

    ReplyDelete
  2. அந்தாதிக் கவிதை..... காதலை போற்றுது....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ரசித்ததற்க்கு நன்றி தேவன் மாயம்

    ஜேகே

    வாழ்த்துக்களுக்கு நன்றி கருணாகரசு

    ஜேகே

    ReplyDelete
  4. //
    அறியாததெல்லாம் தெரிவித்தது
    தெரிந்ததெல்லாம் புதிதானது
    புதிதெல்லாம் புதிரானது
    புதிரெல்லாம் விடையானது //

    வார்த்தை ஜாலம்...

    ReplyDelete
  5. நன்றி புலவன் புலிகேசி

    ஜேகே

    ReplyDelete
  6. நல்லாருகீங்களா ஜே.கே,சந்தர்,ப்ரபா,கேயார்?

    ரொம்ப நாள் ஆச்சுதான். :-)

    விடுபட்டு போயிருந்த கவிதைகள் எல்லாம் வாசித்தேன்.

    நல்லாருக்கு மக்காஸ்!

    ReplyDelete
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பா ரா...

    ReplyDelete