Tuesday, March 23, 2010

என்றோ எழுதிய கவிதை - 17

நான் யார்?

உயிரா?
உயிர் உள்ள உடலா?
உயிரும் உடலுமா?

உயிர்த்தது "நான்" என்றால்...
உதிர்வதும் "நான்" தானே?
எனில்...
உயிரில்தான் "நான்"!

உடலின் தோற்றம் "நான்" என்றால்...
உடல் மறைவதும் "நான்" தானே?
எனில்...
உடலில்தான் "நான்"!

உயிரும் உடலும் "நான்" என்றால்..
உயிரோடு உடல் போவதும் "நான்" தானே?
எனில்..
உடலும் உயிரும்தான் "நான்"!

யோசித்து பார்தததில் தவறு தெரிந்தது...
"நான்" என்பது "நான்" அல்ல...
எல்லாம் வல்ல "அவன்" என்று!

3 comments:

  1. கேயார்

    நான் கடவுள் என்பது போலிருக்கிறது....ரசித்தேன்

    நீ இன்னும் நிறைய எழுத வேண்டும் நண்பா

    நன்றி

    கேயார்

    ReplyDelete
  2. நான்..... என்பது அவரவை நம்பிக்கையைப் பொறுத்தது.

    ReplyDelete