Thursday, March 11, 2010

மனைவி!

இளமையில் முதுமையின் அனுபவந்தந்து
முதுமையில் இளமையின் சுகந்தருவாள்

இருக்கும் வரையில் இல்லாதிருப்பாள்
இல்லாதிருக்க ஏங்க வைப்பாள்

வாழ்வோடு இழைந்தது அறியாது
நாம் இருப்போம் அவளோடு
அவளன்றி வாழ்வொன்று இல்லாதுபோமோ?

அவளற்ற மெளனம் கொல்லும்
அவளோடு மெளனம் என்னை வெல்லும்

எல்லாம் அறிந்தும் ஊடல் தொடரும்
அவளோடு என் உலகம் வளரும் !!

4 comments:

  1. ஒரு கவிதை அம்மாவுக்கு,
    ஒரு கவிதை மனைவிக்கு,

    நல்லா சமாளிக்கற ஜே கே!

    லொள்ளுடன்,
    கேயார்

    ReplyDelete
  2. சமாளிக்கவில்லையென்றால் கவிதை வராது நண்பா

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  3. நன்றி சிவாஜி சங்கர்


    ஜேகே

    ReplyDelete