Wednesday, December 29, 2010

காதலா காதலா

காதலா காதலா இது தான் காதலா
தன்னை ஈதலால் தந்தது காதலா
தனை ஈர்த்ததால் ஈன்றது காதலா
காதலா காதலா இது தான் காதலா

சேர்தலால் கொண்டது காதலா
நீ அன்றி தேய்தலாலானது காதலா
ஊடலால் ஊர்ந்தது காதலா இல்லை
கூடலில் சுரந்தது காதலா

இல்லத்தால் ஆனது காதலா உனை
உள்ளத்தால் ஏற்றது காதலா
தாழ்தலால் வளர்ந்தது காதலா நீ
ஏற்றதால் படர்ந்தது காதலா


பருவத்தின் களவாய் காதலா
அருவத்தின் அளவாய் காதலா
முதுமை ஆனதால் காதலா உன்
பதுமை மனதால் வந்தது காதலா

உன் உணர்வே தான் காதலா
உள்ளுணர்வே தான் காதலா
நீயில்லா சாதலும் காதலா
சாதலில் வாழ்தலும் காதலா

காதலா காதலா இது தான் காதலா

5 comments:

  1. இது மனதில் வந்த காதலா
    இல்லை மதியில் வந்த காதலா
    இது அன்பில் தோய்ந்த காதலா
    இல்லை மையில் எழுந்த காதலா

    நண்பா! சொல்வாயா காதிலே?!

    -கேயார்

    ReplyDelete
  2. உன் உணர்வே தான் காதலா
    உள்ளுணர்வே தான் காதலா
    நீயில்லா சாதலும் காதலா
    சாதலில் வாழ்தலும் காதலா/////

    அருமை அருமை... :)

    இது தான் காதல்..

    ReplyDelete
  3. இது தான் காதல் :)

    ReplyDelete
  4. கவிதையாய் வாழ்த்துக்கு நன்றி கேயார்,

    ReplyDelete
  5. வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெஜெ

    ReplyDelete