Sunday, September 5, 2010

சென்னையில் மழை!

சாலைகளின் குளியலில்
வாகனங்களின் மறியல்
அலுவலக போராளிகளின்
தாமத வழிகாட்டி
கண்ணீர் குவியலில்
இயற்கைக்கு புத்தாடை
செந்நீர் குட்டையாய்
மகனுக்கு குளத்தின் அறிமுகம்
இடைவிடா தடைதரும்
மின்சாரத்தோழன்
பள்ளங்களை மறைக்கும்
சமதர்மசான்று
கேட்காமல் வரும்
விடுமுறை விண்ணப்பம்
இது சோம்பேறியாக்கும்
தந்திரம், வானிலை
அறிக்கையாளரை என்றும்
ஏமாற்றும் மந்திரம்

6 comments:

  1. //அறிக்கையாள்ரை//

    பிழை சரி செய்யவும் ஜே.கே.

    ReplyDelete
  2. யாதர்த்த நிகழ்வுகளை கோர்த்த விதமும் சொல்லிய விதமும் மிக அருமை ஜே.கே .
    வாழ்த்துகள்.
    //அறிக்கையாளரை //
    இதுவும் கூட போடலாம் தானே ஜே.கே
    //அறிவிப்பாளரை//
    நன்றி

    ReplyDelete
  3. நன்றி கல்யாணி சுரேஷ், வேல்கண்ணன் சொல்லியது போல் ”அறிவிப்பாளரை” ”அறிக்கையாளரை” என்று மாற்றிவிட்டேன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    வேல்கண்ணண்

    வாழ்த்துக்களுக்கு நன்றி , நீங்கள் கூறியது உண்மை அறிக்கையாளர் மிகப்பொருத்தமாக இருக்கிறது

    நன்றி வேல்கண்ணண்

    ReplyDelete
  4. நல்லக்குதுபா, இன்னும் சென்னை பாஷைல சொல்லிருந்தா டாப்பு ..

    ReplyDelete
  5. நன்றி ருத்ரவீணை , சென்னை பாஷையிலும் முயற்சி செய்திட வேண்டியது தான்...


    நன்றி ருத்ரவீணை

    ஜேகே

    ReplyDelete