Saturday, June 26, 2010

யாதுமாகி!

நேற்றாகி, இன்றாகி, பொழுதாகி,
என் ஆலம்விழுதாகி, வேராகி,
எனை சுமந்து,
இன்று நான் சுமக்க விரும்பும் தேராகி,
நிற்கும் தெய்வமாகி,
தொழுது பெரும் வரமாகி,
அது கிட்டா சோகமாகி,
தரும் நினைவுமாகி,
என்னுள் யாதுமாகி நின்றாய்
என் தாயே!

7 comments:

  1. தாய் என்னும் கடவுளுக்கு தலை மரியாதை....
    கவிதை சிறப்பு.

    ReplyDelete
  2. ”தாய் என்னும் கடவுளுக்கு....”

    அருமை கருணாகரசு , உண்மையில் பணி நிமித்தமாக பல ஊர்களில் வேலை செய்யும் சூழலில் நான் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறேன் அதனால் என்னிடம் என் தாய் அருகில் இல்லாத குறை சற்றே அதிகம்..

    நன்றி கருணாகரசு

    ஜேகே

    ReplyDelete
  3. அருமை

    யாதுமாகி நின்ற தாய்

    கவிதையாகி நின்ற ஜேகே

    ReplyDelete
  4. எல்லாமே அவள்தானே... நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி VELU.G

    வாழ்த்துக்களுக்கு நன்றி பாலாசி

    ஜேகே

    ReplyDelete
  6. நன்றி பா ரா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ஜேகெ

    ReplyDelete