நாய்க்குட்டியைப் போல
அவள் பின்னால்
தினமும் நான்...!
'வாலாட்டுவது' மட்டும்தான்
தெரிகிறது அவளுக்கு!
Showing posts with label கேயார் கவிதைகள். Show all posts
Showing posts with label கேயார் கவிதைகள். Show all posts
Tuesday, November 15, 2011
Wednesday, October 26, 2011
தீபாவளி - 2
காலையிலே எழுந்திக்கிட்டு,
எண்ணைதனை தேச்சிக்கிட்டு,
சுடுதண்ணில குளிச்சிக்கிட்டு,
புச்சு துணி உடுத்திக்கிட்டு,
சாமிதனை நெனச்சிகிட்டு,
பெரிசுகளை வணங்கிகிட்டு,
புஸ்வானம் பூத்துகிட்டு,
இனிப்புதனை நக்கிகிட்டு,
காரம்தனை ஏத்திகிட்டு,
டி வி தனை கட்டிகிட்டு,
ரிலீஸ் படத்த பாத்துகிட்டு,
ரிலாக்ஸா ஓட்டிக்கிட்டு...
இருக்கத்தானே தீபாவளி...!
எண்ணைதனை தேச்சிக்கிட்டு,
சுடுதண்ணில குளிச்சிக்கிட்டு,
புச்சு துணி உடுத்திக்கிட்டு,
சாமிதனை நெனச்சிகிட்டு,
பெரிசுகளை வணங்கிகிட்டு,
புஸ்வானம் பூத்துகிட்டு,
இனிப்புதனை நக்கிகிட்டு,
காரம்தனை ஏத்திகிட்டு,
டி வி தனை கட்டிகிட்டு,
ரிலீஸ் படத்த பாத்துகிட்டு,
ரிலாக்ஸா ஓட்டிக்கிட்டு...
இருக்கத்தானே தீபாவளி...!
Sunday, October 16, 2011
அலை!
பையன் நல்லா பரிட்சை எழுதுவானா..?
பஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...?
பாஸு தாளிக்காம இருப்பாரா...?
பெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..!
மழை வரும்போல இருக்கே...!
வெங்காய வாசன தூக்குதே...!
என்ன கவிதை எழுதுறது ...?
வீக் எண்ட் எங்க போலாம்...?
அம்மாடி, மணியாச்சே!
அமைதி வேண்டி
அமர்ந்து செய்த
அய்ந்து நிமிட தியானத்தில்...
அலைபாயும் மனது...!!
பஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...?
பாஸு தாளிக்காம இருப்பாரா...?
பெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..!
மழை வரும்போல இருக்கே...!
வெங்காய வாசன தூக்குதே...!
என்ன கவிதை எழுதுறது ...?
வீக் எண்ட் எங்க போலாம்...?
அம்மாடி, மணியாச்சே!
அமைதி வேண்டி
அமர்ந்து செய்த
அய்ந்து நிமிட தியானத்தில்...
அலைபாயும் மனது...!!
Wednesday, October 12, 2011
வாழ்வு
எந்நேரம் குந்திகிட்டு,
சாமிகிட்ட தவமிருந்தா,
வரம்தான் கெடச்சிருமா?
வளம்தான் சேந்திருமா?
துண்ணூறு இட்டுகிட்டு,
சாமிதனை வணங்கி விட்டு,
கடமைதனை செஞ்சி போட்டா,
வாழ்வும்தானே செழிச்சிருமே...!
பொறந்த கடன் அடஞ்சிருமே...!!
சாமிகிட்ட தவமிருந்தா,
வரம்தான் கெடச்சிருமா?
வளம்தான் சேந்திருமா?
துண்ணூறு இட்டுகிட்டு,
சாமிதனை வணங்கி விட்டு,
கடமைதனை செஞ்சி போட்டா,
வாழ்வும்தானே செழிச்சிருமே...!
பொறந்த கடன் அடஞ்சிருமே...!!
Sunday, October 9, 2011
வெளங்கல?!
புரியல?! படிச்சுபோட்டும் இத துவங்கலாம்...
காதல் புரியும் மாமா...
கன்னிய காக்க வெக்கலாமா...?
சாதி சனம் கூட்டியாந்து...
மேள தாளம் கொட்டிப்போட்டு...
தாலி ஒண்ண கட்டிபோட்டா
என்னிய நானும் கொடுத்திடுவேன்...
ஊரறிய சேத்துகிட்டா...
ஊரடங்கப்போ தந்திடுவேன்...
மையெழுதும் கண்ணில...
மனசெல்லாம் உன்னுல...
உடம்ப தேடும் வயசுல...
உனக்கு வெளங்க வெக்க முடியல...!
காதல் புரியும் மாமா...
கன்னிய காக்க வெக்கலாமா...?
சாதி சனம் கூட்டியாந்து...
மேள தாளம் கொட்டிப்போட்டு...
தாலி ஒண்ண கட்டிபோட்டா
என்னிய நானும் கொடுத்திடுவேன்...
ஊரறிய சேத்துகிட்டா...
ஊரடங்கப்போ தந்திடுவேன்...
மையெழுதும் கண்ணில...
மனசெல்லாம் உன்னுல...
உடம்ப தேடும் வயசுல...
உனக்கு வெளங்க வெக்க முடியல...!
Saturday, October 8, 2011
புரியல?!
கண்ணுல காட்டுற ஆசையில,
அது தரும் போதையில...
மாதவியாத்தான் மயக்குற..!
மனசு தந்த தெகிரியத்துல,
கைகள் நீளும் நேரத்துல...
கண்ணகியாத்தான் தீய்க்குற...!
சுட்டாத்தானே
தங்கமும் துலங்குது...!
கைப்பட்டாத்தானே
பெண்மையும் மலருது..!
இது உனக்கு மட்டும்
ஏன் புரியாம போகுது...?!
-தொடரும் (?!)
அது தரும் போதையில...
மாதவியாத்தான் மயக்குற..!
மனசு தந்த தெகிரியத்துல,
கைகள் நீளும் நேரத்துல...
கண்ணகியாத்தான் தீய்க்குற...!
சுட்டாத்தானே
தங்கமும் துலங்குது...!
கைப்பட்டாத்தானே
பெண்மையும் மலருது..!
இது உனக்கு மட்டும்
ஏன் புரியாம போகுது...?!
-தொடரும் (?!)
Tuesday, October 4, 2011
Monday, October 3, 2011
காதலில் இருந்ததென்ன...?
வானவில்லாய் வந்ததென்ன...
வண்ணத்துப்பூச்சியாய் பறந்ததென்ன...
மனதை அள்ளிச் சென்றதென்ன..
நெஞ்சைக் கிள்ளிப் போனதென்ன..
மாற்றான் கைப் பிடித்ததென்ன...
சொல்லாமல் கொன்றதென்ன...
பித்துப் பிடித்ததென்ன...
செத்து வாழ்வதென்ன..
கேள்வியாய் நின்றதென்ன...
கேலியாய் ஆனதென்ன...
காதலில் இருந்ததென்ன...
காதலி போன பின்ன..?
வண்ணத்துப்பூச்சியாய் பறந்ததென்ன...
மனதை அள்ளிச் சென்றதென்ன..
நெஞ்சைக் கிள்ளிப் போனதென்ன..
மாற்றான் கைப் பிடித்ததென்ன...
சொல்லாமல் கொன்றதென்ன...
பித்துப் பிடித்ததென்ன...
செத்து வாழ்வதென்ன..
கேள்வியாய் நின்றதென்ன...
கேலியாய் ஆனதென்ன...
காதலில் இருந்ததென்ன...
காதலி போன பின்ன..?
Sunday, October 2, 2011
ஸ்டிக்கர் பொட்டு!
பெரிய மண்டபம் எடுத்து..
சீரு செனத்தி வெச்சி...
கண்ணாலம்தான் பண்ணீரு...!
அயல்நாடு சோடியாப்போனா
பொண்ணு, மருமவப்புள்ள...
பாத்த கண்ணுலதான் கண்ணீரு..!
சீரு செனத்தி என்னாச்சி...?
வங்கி இருப்புல மண்ணாச்சி...!
பொண்ணு நெத்தியில,
ஸ்டிக்கர் பொட்டுதான் மிச்சமாச்சி...!
சீரு செனத்தி வெச்சி...
கண்ணாலம்தான் பண்ணீரு...!
அயல்நாடு சோடியாப்போனா
பொண்ணு, மருமவப்புள்ள...
பாத்த கண்ணுலதான் கண்ணீரு..!
சீரு செனத்தி என்னாச்சி...?
வங்கி இருப்புல மண்ணாச்சி...!
பொண்ணு நெத்தியில,
ஸ்டிக்கர் பொட்டுதான் மிச்சமாச்சி...!
Tuesday, September 20, 2011
காதல் கவிதை
சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை! எழுதியது நினைவிருக்கலாம்...! இது முழுக்க முழுக்க சினிமாத் தலைப்புகள் வைத்து எழுதப்பட்ட கவிதை...! வேறு வார்த்தைகளைச் சேர்க்கக்கூடாது என்கிற வைராக்கியம்(?!)
எனக்கு 20 உனக்கு 18
இளமை ஊஞ்சலாடுகிறது ...!
கண் சிமிட்டும் நேரம்
காதல் வைரஸ்....
'சில்லு'னு ஒரு காதல்...
டார்லிங் டார்லிங் டார்லிங்...!
'ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே...!'
வா இந்த பக்கம்...!
கெட்டி மேளம்...?
தாலி பாக்கியம்..?
போலீஸ்காரன் மகள்...??!!
காதலிக்க நேரமில்லை...!!!
எனக்கு 20 உனக்கு 18
இளமை ஊஞ்சலாடுகிறது ...!
கண் சிமிட்டும் நேரம்
காதல் வைரஸ்....
'சில்லு'னு ஒரு காதல்...
டார்லிங் டார்லிங் டார்லிங்...!
'ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே...!'
வா இந்த பக்கம்...!
கெட்டி மேளம்...?
தாலி பாக்கியம்..?
போலீஸ்காரன் மகள்...??!!
காதலிக்க நேரமில்லை...!!!
Monday, September 19, 2011
கவிதை திர'ட்டு'!
காதலி
நோட்டு,
காதலன்
பாட்டு...!
அப்பா
திட்டு...
கண்டிப்பா
வெட்டு..!
வீட்டை
விட்டு,
கம்பி
நீட்டு..!
கால்
கட்டு...
கட்டில்
தொட்டு,
தொட்டில்
ஆட்டு...!
இல்லை
துட்டு...!
கணவன்
சுட்டு...
அழுத
சிட்டு..
புத்தி
மட்டு..!
நோட்டு,
காதலன்
பாட்டு...!
அப்பா
திட்டு...
கண்டிப்பா
வெட்டு..!
வீட்டை
விட்டு,
கம்பி
நீட்டு..!
கால்
கட்டு...
கட்டில்
தொட்டு,
தொட்டில்
ஆட்டு...!
இல்லை
துட்டு...!
கணவன்
சுட்டு...
அழுத
சிட்டு..
புத்தி
மட்டு..!
Thursday, September 1, 2011
பிள்ளையாரு வர்றாரு!!
வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!
காதுகளை விசிறிகிட்டு...
தும்பிக்கையை ஆட்டிகிட்டு ...
தொந்திதனை தூக்கிகிட்டு...
வர்றாரரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!
கொயுக்கட்டை துன்னுகிட்டு
கொயு கொயுன்னு இருக்கிறாரு...!
கொண்ட கடலை மென்னுகிட்டு
கொண்டாட்டம் செய்யுறாரு...!
பழங்களை முழுங்கிகிட்டு
பள பளன்னு சொலிக்கிறாரு...!
அலுங்காம, நலுங்காம,
தளுககாதான் பூபோட்டு,
அவர் காலைப் புடிச்சாத்தான்
நல்லத பேச விடுவாரு...!
நல்ல மனசை கொடுப்பாரு...!
'லஸ்மி'யான்ட சொல்லிவிட்டு,
'ரிச்'சா வாழ வெப்பாரு!
சிம்பிள் சாமி அவருதானே...!
அரச மரம் போதும்தானே...!
மஞ்சத்தூளை வெச்சி நாமும் - அவர்
மனசை புடிச்சி வெப்போமே!
மொத சாமி அவருதானே...!
மொத சுளியும் அவருதானே...!
டெய்லி அவரை நெஞ்சில வெச்சா,
கஸ்டமெல்லாம் தொலஞ்சிருமே..!
எல்லாம் சோக்கா முடிஞ்சிருமே...!!
வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!
Wednesday, August 31, 2011
கடற்கரை காதலி!
பட்டுக் கொண்டு...
படர்ந்து கொண்டு..
பற்றிக் கொண்டு..
சுற்றிக் கொண்டு..
நழுவிக் கொண்டு..
இறுகிக் கொண்டு..
அணைத்துக் கொண்டு..
அரவணைத்துக் கொண்டு..
மீண்டும் மீண்டும்
தென்றலே...
என்னைத் தொடு....!
படர்ந்து கொண்டு..
பற்றிக் கொண்டு..
சுற்றிக் கொண்டு..
நழுவிக் கொண்டு..
இறுகிக் கொண்டு..
அணைத்துக் கொண்டு..
அரவணைத்துக் கொண்டு..
மீண்டும் மீண்டும்
தென்றலே...
என்னைத் தொடு....!
Thursday, August 25, 2011
என்றோ எழுதிய கவிதை - 24
இரவு படுத்தால்
விழித்தெழுவது
உன் கையில் இல்லை
எனும்போது...
'நாளை நமதே' என்பது
எந்த நம்பிக்கையில்?!
விழித்தெழுவது
உன் கையில் இல்லை
எனும்போது...
'நாளை நமதே' என்பது
எந்த நம்பிக்கையில்?!
Wednesday, August 24, 2011
வாழ்க்கை
கூட்டிக் கழித்துப்
பெருக்கி வகுத்து
வாழ்வதா வாழ்க்கை ?
கூடிக் களித்து,
சுருக்கிப் பகுத்து
வாழ்வோமே வாழ்க்கை!!
பெருக்கி வகுத்து
வாழ்வதா வாழ்க்கை ?
கூடிக் களித்து,
சுருக்கிப் பகுத்து
வாழ்வோமே வாழ்க்கை!!
Tuesday, August 16, 2011
நான் எழுதிய கவிதை....!
உதிர்ந்த இலை...
கசக்கும் காய்...
வெம்பிய பழம்...
கால் சூம்பிய சிறுவன்..
நான்காம் பிறைச் சந்திரன்..
சுவற்றிலட்ட சாணம்...
கடல் நீர்...
கை அளையும் மண்...
கால்களை வருடும் அலை...
மிச்சமான நெருப்பு..
அறுந்துபோன செருப்பு...
வாழ்ந்து கெட்டவனின் இருப்பு..
பேருந்துப் புகை...
சாலையின் குப்பை...
காற்றின் மாசு..
தங்காத தூசு...
சொல்லாத சொல்...
எழுதாத வார்த்தை...
நிரம்பாத பக்கம்..
நான் எழுதிய கவிதை....!
கசக்கும் காய்...
வெம்பிய பழம்...
கால் சூம்பிய சிறுவன்..
நான்காம் பிறைச் சந்திரன்..
சுவற்றிலட்ட சாணம்...
கடல் நீர்...
கை அளையும் மண்...
கால்களை வருடும் அலை...
மிச்சமான நெருப்பு..
அறுந்துபோன செருப்பு...
வாழ்ந்து கெட்டவனின் இருப்பு..
பேருந்துப் புகை...
சாலையின் குப்பை...
காற்றின் மாசு..
தங்காத தூசு...
சொல்லாத சொல்...
எழுதாத வார்த்தை...
நிரம்பாத பக்கம்..
நான் எழுதிய கவிதை....!
Monday, July 18, 2011
என்றோ எழுதிய கவிதை - 23
பாடிப் பறந்தேன்...!
தாவித் திரிந்தேன்...!
யார் கையிலும் சிக்காத
காற்றின் சுதந்திரம் எனக்கு...!
அனைத்தையும்
'மூன்று முடிச்சு'-களில்
இழந்து விட்டேன்!!
தாவித் திரிந்தேன்...!
யார் கையிலும் சிக்காத
காற்றின் சுதந்திரம் எனக்கு...!
அனைத்தையும்
'மூன்று முடிச்சு'-களில்
இழந்து விட்டேன்!!
Monday, June 20, 2011
என்றோ எழுதிய கவிதை - 22
தலையில் வீட்டுக் கடன்...
உடலில் உறவானவரின் கடன்...
நெஞ்சில் நண்பர்களின் கடன்...
உயிரில் உயிரான்வரின் கடன்...
இத்துணை சுமைகளின் நடுவில்...
ஒரு துளி தேனாய்...
இன்றைய கவிதை!
Sunday, June 19, 2011
என்றோ எழுதிய கவிதை - 21
தோழர் ஜே கே 'சொல்லிக்காம கொண்டுக்காம' போனதால... இதோ இப்ப 'சைடு கேப்ல' நம்ம கவிதை...!
தன்னந்தனியாய் அவள்...
தாகமாய் நான்...!
திகட்டாத தித்திப்பாய் அவள்...
தீயாய் நான்...!
துள்ளலாய் அவள்..
தூண்டில் மீனாய் நான்..!
தெம்மாங்காய் அவள்...
தேனிசையாய் நான்...!
தையலாய் அவள்...
தொட்டு விடும் தூரத்தில் நான்...! - என்றாலும்
தோல்வியில் முடிந்தது எங்கள் காதல்..!!
Sunday, April 24, 2011
கல்வியும், கலவியும்!
ஜே கே 'ஷ்டைல்'-ல் ஒரு கவிதை!
கற்கக் கற்க
முதலுமில்லை, முடிவுமில்லைதான்...!
புதிராயும், புதுமையாயும்
இருப்பது எப்போதும் இங்குதான்...!
ஒவ்வொரு முறையும்
கற்பதும், கற்பிப்பதும் சுகம்தான்...!
நடந்ததை நினைவில் வைத்து,
அசை போடுவதில் என்றும் ஆனந்தம்தான்..!
ஒன்றைப் பொதுவில் வைத்து,
ஒன்றை மறைவில் வைத்து
வாழ்தல் முறையாகும்...!
மாறாய்க்
கலவியைப் பொதுவிலிட்டு,
கல்வியைக் குடத்திலிட்டு
வாழ்தல் பிழையாகும்...!
Subscribe to:
Posts (Atom)
