Showing posts with label அக்டோபர் 2001. Show all posts
Showing posts with label அக்டோபர் 2001. Show all posts

Monday, June 20, 2011

என்றோ எழுதிய கவிதை - 22

தலையில் வீட்டுக் கடன்...
உடலில் உறவானவரின் கடன்...
நெஞ்சில் நண்பர்களின் கடன்...
உயிரில் உயிரான்வரின் கடன்...
இத்துணை சுமைகளின் நடுவில்...
ஒரு துளி தேனாய்...
இன்றைய கவிதை!

Sunday, June 19, 2011

என்றோ எழுதிய கவிதை - 21

தோழர் ஜே கே 'சொல்லிக்காம கொண்டுக்காம'  போனதால... இதோ இப்ப 'சைடு கேப்ல' நம்ம கவிதை...!

தன்னந்தனியாய் அவள்...
தாகமாய் நான்...!
திகட்டாத தித்திப்பாய் அவள்...
தீயாய் நான்...!
துள்ளலாய் அவள்..
தூண்டில் மீனாய் நான்..!
தெம்மாங்காய் அவள்...
தேனிசையாய் நான்...!
தையலாய் அவள்...
தொட்டு விடும் தூரத்தில் நான்...! - என்றாலும் 
தோல்வியில் முடிந்தது எங்கள் காதல்..!!

Thursday, November 5, 2009

என்றோ எழுதிய கவிதை - 9

"Divorce comes before Marriage"
in English Dictionary...
தமிழர் நாங்கள் பண்பாடு காப்பவர்கள்....!
அகராதியைப் புரட்டுங்கள்,
"திருமணத்திற்குப் பிறகுதானே
விவாகரத்து வருகிறது!"

Sunday, October 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 6

'மாற்றான் தோட்டத்து
மல்லிகை மணக்கும்!'
என்கிறாயே...
வெட்கமாயில்லை?!
அவன் முகர்ந்த
எ(மி)ச்சம்தானே உனக்கு!

Tuesday, October 6, 2009

அன்றும் இன்றும்

கைகள் உணர்வாய்
மொழிக்கும் மௌனமாய்
காதல் காமமாய்
எழுதும் கவிதையாய்

மயிர்க்கால் அசைவும்
மனசுள் அலைபாயும்
சிரிக்க சிரிக்க
சிலிர்த்துப் போகும்

வெட்கம் விட்டு
விரசம் மறந்து
விரகம் உணர்ந்து
வளர்த்த தீபம்
இன்னும் அணையவேயில்லை!
ஒளியாய்ப் பக்கத்தில்!

நடு சாமத்தில்
'தொம்' என்று கால்போட்டு
தூக்கம் கலைக்கும்
என் வீட்டுக் கொழுந்து!!

தாலாட்டி மடி ஆடும்,
நாவும் பாட்டு பாடும்,
மனம் மட்டும்
அன்றைய நினைவை அசைபோட்டு,
என்றும் எனக்கு அழகாய்,
உறங்கும் மனைவியைப் பார்த்து,
பெருமூச்சு விடும்!
மடி ஆட்டிக்கொண்டே!