Showing posts with label ஜே கே கவிதைகள். Show all posts
Showing posts with label ஜே கே கவிதைகள். Show all posts

Wednesday, April 4, 2012

தன்னிரக்கம்

தன்னிலே ஈன்றவள்
தன்னையே ஈன்றவளுக்கு
தாயாக, உறவில்
ஈன்றதே இரையாக
இரையானதை காத்திடவே
ஈன்றவரே இறைவனாகி
தன் இரக்கம் காட்டிடுவாரே

Friday, March 30, 2012

விடியலுக்கு காத்திரு!

கதிரும் வாராது
நிலவும் போகாத
உறக்கம் கலைந்தும்
விழிப்பு வாராத வேளையில்
போர்வையில் பதுங்கும் மனது..!

கோர்வையாய் கனவை
மீண்டும் துவக்க,
இனிதாய் விடியல்
மெதுவாய் எட்டிப்பார்க்கும்...
இடராய் பிள்ளை இடம் கேட்கும்..
கழுத்தோடு முகம் புதைக்கும்,
ஆயுளின் பலனாய் சுகம் காட்டும்,
விடியல் முழுதாய் வந்து நிற்கும்!

சுகம் பெறும் மனம் மீண்டும்
விடியலுக்கு காத்திருக்கும்...!!

Wednesday, March 28, 2012

வேற்று முகம்

என் வீட்டு
மழலைக்கும்,
முதுமைக்கும்
வேற்று முகமுண்டு...

பாராதோரை பார்த்ததில் வரும்
மழலைக்கு...
பார்த்தோரையே பார்த்திருக்க வரும்
முதுமைக்கு...
 

Thursday, December 1, 2011

வேட்டை

ஆளின்றி அம்பின்றி
ஆளின்றி அரவமின்றி
ரணமாக்கும்
காதல் வேட்டை..!

வேடனே இரையாகும்
வேட்டை...!

Friday, November 18, 2011

விளக்கு

வெளிச்சம் தரும்
பக்தி தரும்
இருள் போக்கும்
என்றே தான் அறிந்திருந்தேன்
விட்டில் பூச்சி அதனில்
இறக்கும் வரை

Thursday, November 17, 2011

சுழற்சி

உலகம் தன்னை
தினமும் சுற்றுகிறது
என்றறிந்தேன்
நான் இருக்கும் இடம்
மட்டும் ஏனோ நகரவேயில்லை

Wednesday, November 16, 2011

பயிற்சி

தாலி கட்டி,
வேலி கட்டி,
மஞ்சள் கொடியில்
என்னை கட்டி,
தினமும் விடுபட்டு,
தினமும் சிறைபட்டு,
முடியும் தினம் தெரியவில்லை...!

விடாது செய்கிறேன் நானும்
ஒரு பயிற்சி..!!

Monday, November 14, 2011

அயற்சி

கடலை கோப்பையில்
எடுத்து கரை சேர்க்க,
நெடுநாளாய் முயற்சிக்கிறேன்...
அலைகள் குறையவில்லை!

வேலை நடுவே விழித்தேன்...
வேலை குறையவில்லை!
அயற்சி மட்டும் தான் மிச்சம்!!

Sunday, November 13, 2011

முயற்சி

விண்ணை தொடத்தான் எம்பினேன்..
விட்டத்தை கூட தொடவில்லை!

ஆனாலும் எம்புவதை
விடவில்லை..!!

Thursday, November 10, 2011

குளியல்

முழு குளியல் என்றுமில்லை...
குளித்ததெல்லாம் போறவில்லை...
நீண்டதாய் இல்லை தினமும்...
சிறியதாயேனும் குளியல் உண்டு...

மனதிற்கும் ஒரு முறையேனும்
உற்சாக நினைவு தினமும் தேவை
குளியல் போலவே..!!

Sunday, November 6, 2011

அழகு

தேடியிருக்க,
தேடுதலிலும்
அழகில்லாதிருக்கும்!
நாடியிருக்க,
நாடுதலில்
நாட்டமின்றிருக்கும்..!
நல்லவையிலே
இருந்திருக்கும்!!

Saturday, November 5, 2011

பொறுமை

குடும்பத்தில் அன்பாகும்,
மற்றோரிடம் மதிப்பாகும்,
தன்னிடம் நம்பிக்கையாகும்,
இறைவனிடம் பக்தியாகும்,
இருந்திருக்க குணமாயிருக்கும்..!

Friday, November 4, 2011

கோபம்

தன்னில் தவறில்லையெனில்
தேவையில்லை..!

தவறாய் தானிருக்க
பயனில்லை...!!

தன்னிலை அறிந்திருக்க,
கோபம் என்றே ஒன்றில்லை..!!!

Tuesday, November 1, 2011

பயம்

நிழல் போல்
சிறியதையும்
பெரிதாய் காட்டும்..!

நிழல் போல்தான்
என்று மறந்திருக்க,
மறைந்திருக்கும்..!

அல்லால்
அவையே வாழ்வில்
நிறைந்திருக்கும்!

Monday, October 31, 2011

நினைப்பதை செய்

நினைவெல்லாம்
செயலாக,
நினைவே
வாழ்வாகும்!
வசமாகும்!!

செயலில்லா
நினைவாய்
மட்டுமிருக்க,
வாழ்வே
நினைவாய்
மட்டுமிருக்கும்!
வசமில்லாதிருக்கும்!!
வாசமில்லாது போகும்!!

Sunday, October 30, 2011

எல்லாம் சில காலம்

மழையாய், வெயிலாய்,
உதிர்தலாய், வசந்தமாய்,
எல்லாம் சில காலம்
மனிதரின் வாழ்வு போல...!

ஏற்றமும், இறக்கமும்,
இருப்பும், இல்லாமையும்,
உறவும், பிரிவும்,
சிரிப்பும், துக்கமும் என
எல்லாம் சில காலம்...!

புரிந்தோருக்கும் மட்டும்
என்றும் வசந்தகாலம்தான்...!!

Saturday, October 29, 2011

விதை

சிறிதாய் மண்ணுள் விதைக்க,
பெரிதாய் மரமாய் ஆனது;
ஸ்திரமாய் நிழலும் தந்தது!

சிறிதாய் என்னுள் விதைக்க,
பெரிதாய் வரமானது;
வாழ்வே ஸ்திரமானது!

விதை சிறிதேயானாலும்,
விதைத்தாலே பலனாகும்!
விதையாய் மட்டுமே
வைத்திருக்க வீணாகும்!!

Friday, October 28, 2011

கடனாயேனும் சிரி

தினமொரு முறையேனும்
கடனாய் சிரித்தாலும் போதும்!

உலகம் இனித்திடும்!!
உன்னை சுற்றி
யாவும் சிரித்திடும்!
இவ்வுலகமும் சிரிப்பாய்
இருந்திடும்...!!

Thursday, October 27, 2011

தீபாவளி - 3

கையெல்லாம் பட்டாசு மருந்து
முகமெல்லாம் பூரிப்பு
கடனாய் வந்ததென்றாலும்
கடலாய் இருந்தது சிரிப்பு அன்று..

கையில் படாது பட்டாசு வெடித்து
சொந்தமாய் யாவுமிருந்தும்
சொந்தங்கள் தூரமிருக்க
கடலாய் யாவுமிருந்தும்
கடனாய் வந்தது போலிருக்கும்
கண்ணாடி பார்த்து சிரித்திருக்கும் இன்று..

Wednesday, October 26, 2011

தீபாவளி -1

வரிசையாய் ஒளி
விளக்காய் ஒளி
வெடியாய் ஒளி
மத்தாப்பாய் ஒளி
என எங்கும் ஒளியாய்
ஒரு பண்டிகை!

யாவருக்கும் இனி
ஒளிமயமாய் வாழ்விருக்க
ஒளி அறிந்தோருக்கு
மட்டுமிது தீபாவளி!

ஒளியே பாராது
என்றுமிருப்போரும்
ஒளி பார்த்திடும்
நாளதிலே
உலகெங்கும்
வந்திடும் தீபாவளி!