Wednesday, April 13, 2011

பரிசு

தருவதின் சந்தோஷம் கொண்டு,
தருவோர்க்கு வருமே சந்தோஷம்!

அத்தருதலில் அத்தருணத்தில்
அஃதே அவரின் பரிசு!!

Tuesday, April 12, 2011

வலி

தன்னுயரம் தானறியாது,
வலிக்க, வலிக்க,
உயர்ந்திருக்கும், மரத்திருக்கும்!
நம் வலி நமக்கு மட்டும் தான்!!

சிறு வலியை பெரு வலி மறக்கடிக்கும்
பெரு வலி பழகிட, புது வலி
தேடியிருக்கும் நம் வாழ்வு!

Saturday, April 9, 2011

புத்தகம்

ஆசானாய் கோலின்றி,
கோபமின்றி போதிக்கும்!

தேடுதல் தந்திடும், தேடவிடாது!
தவறெல்லாம் திருத்திடும்
வன்சொல்லில்லாது..!!

என் உலகாயிருக்கும்
மனிதரேயின்றி போனாலும்
புத்தகம் போதும்
உற்ற நண்பன் போலாகும்...!

Friday, April 8, 2011

சந்தேகம்

வெற்றியின் முயற்சியையும்
கூர்முனை இல்லாது செய்யும்
நம் மன போக்கு,
அகத்திடை வந்திட அகமே புறமாகி,
மனமழுங்கிட வைக்கும்!

Thursday, April 7, 2011

புகழ்

நீரின் வட்ட அலைகளாய்
ஒருமுறை கிட்டிட
தொடர்ந்திருக்கும் விரிந்திருக்கும்..!

தன்னிலை புரியாதிருந்தால்
மீண்டும் நீராய் வடிந்திருக்கும்..!!