தருவதின் சந்தோஷம் கொண்டு,
தருவோர்க்கு வருமே சந்தோஷம்!
அத்தருதலில் அத்தருணத்தில்
அஃதே அவரின் பரிசு!!
Wednesday, April 13, 2011
Tuesday, April 12, 2011
வலி
தன்னுயரம் தானறியாது,
வலிக்க, வலிக்க,
உயர்ந்திருக்கும், மரத்திருக்கும்!
நம் வலி நமக்கு மட்டும் தான்!!
சிறு வலியை பெரு வலி மறக்கடிக்கும்
பெரு வலி பழகிட, புது வலி
தேடியிருக்கும் நம் வாழ்வு!
வலிக்க, வலிக்க,
உயர்ந்திருக்கும், மரத்திருக்கும்!
நம் வலி நமக்கு மட்டும் தான்!!
சிறு வலியை பெரு வலி மறக்கடிக்கும்
பெரு வலி பழகிட, புது வலி
தேடியிருக்கும் நம் வாழ்வு!
Saturday, April 9, 2011
புத்தகம்
ஆசானாய் கோலின்றி,
கோபமின்றி போதிக்கும்!
தேடுதல் தந்திடும், தேடவிடாது!
தவறெல்லாம் திருத்திடும்
வன்சொல்லில்லாது..!!
என் உலகாயிருக்கும்
மனிதரேயின்றி போனாலும்
புத்தகம் போதும்
உற்ற நண்பன் போலாகும்...!
கோபமின்றி போதிக்கும்!
தேடுதல் தந்திடும், தேடவிடாது!
தவறெல்லாம் திருத்திடும்
வன்சொல்லில்லாது..!!
என் உலகாயிருக்கும்
மனிதரேயின்றி போனாலும்
புத்தகம் போதும்
உற்ற நண்பன் போலாகும்...!
Friday, April 8, 2011
சந்தேகம்
வெற்றியின் முயற்சியையும்
கூர்முனை இல்லாது செய்யும்
நம் மன போக்கு,
அகத்திடை வந்திட அகமே புறமாகி,
மனமழுங்கிட வைக்கும்!
கூர்முனை இல்லாது செய்யும்
நம் மன போக்கு,
அகத்திடை வந்திட அகமே புறமாகி,
மனமழுங்கிட வைக்கும்!
Thursday, April 7, 2011
புகழ்
நீரின் வட்ட அலைகளாய்
ஒருமுறை கிட்டிட
தொடர்ந்திருக்கும் விரிந்திருக்கும்..!
தன்னிலை புரியாதிருந்தால்
மீண்டும் நீராய் வடிந்திருக்கும்..!!
ஒருமுறை கிட்டிட
தொடர்ந்திருக்கும் விரிந்திருக்கும்..!
தன்னிலை புரியாதிருந்தால்
மீண்டும் நீராய் வடிந்திருக்கும்..!!
Subscribe to:
Posts (Atom)